100 பேரோட செய்வேன்.. உனக்கென்ன?.. கேஸ் போட்டுடுவியா?..! காவல்துறையினரை வரைமுறையில்லாமல் பேசும் சோகம்.! - Seithipunal
Seithipunal


டிக் டாக் மாய உலகத்தின் வாயிலாக பலரும் மக்களிடையே அறிமுகமான நிலையில், காலப்போக்கில் இது அவர்களின் வருமானத்திற்கு வழிவகை செய்ததால் அதில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு தெரிந்த விஷயம் அவ்வுளவே என்பதை உறுதி செய்யும் பொருட்டு, தங்களுக்கு தெரிந்த உருட்டுகளை உருட்டி வருமானம் பார்த்து வருகின்றனர். 

இவர்களின் உருட்டு எவ்வுளவு கீழ்த்தரமாக இருக்கும் என்பது, அவர்களின் உருட்டல்களை பார்த்தாலே தெரிந்துவிடும். ஆபாசமாக பேசுவது, தனக்கு எதிரானவரை அவதூறாக திட்டுவது என தொடங்கி, விபச்சாரத்திற்கு ஆள்தேடும் அளவு பல சம்பவங்கள் நடந்துள்ளது. அதனை உறுதி செய்யும் பொருட்டு டிக் டாக்கில் ரவுடி பேபி சூர்யா என வளம் வந்தவர், பலரை விபசாரத்தில் தள்ள முயன்றதும், தள்ளியதற்கும் ஆடியோக்கள் ஆதாரமாக வெளியாகின. 

இந்நிலையில், திருச்சியை சார்ந்த சூர்யா தேவி என்பவர், ரவுடி பேபியின் இன்றைய கணவர் போல வாழ்ந்து வரும் சிக்கா என்ற சிக்கந்தரை செருப்பால் அடித்து வீடியோ பதிவிட, அவர் கொடுத்த வழக்கின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதனால் பயந்துபோன திருச்சி சூர்யா தேவி, தற்கொலை நாடகமாடி தூங்கியதும், அதிகாரிகள் பரபரப்புடன் அவரது வீட்டிற்கு சென்று தூக்கத்தில் இருந்தவரை எழுப்பி கண்டித்து சென்ற சம்பவமும் நடந்துள்ளது. 

தற்போது, ரவுடி பேபி சூர்யா வெளியிட்டுள்ள பல வீடியோக்கள் ஆபாசமாக இருப்பதால், அவரது யூடியூப் சேனலை காவல் துறையினர் முடக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியானது. இதனால் ரவுடி பேபி சூர்யா காவல் துறையினரை அருவருக்கத்தக்க வகையில் பேசி வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், " என்னோட சேனலை முடக்குறீங்களா?... முடக்குங்க... நான் தவறான பாதையை தான் தேடி போவேன்... சாத்தியமா போவேன்.. 

என்னோட பிள்ளை மேலே சத்தியமா சொல்றேன்.. அப்படிதான் போவேன்.. 100 பேருடன் அதுக்கும் தயார்.. என் மேலே விபச்சார கேஸ் போட்டு பாரு.. நான் தீகுளிச்சிருவேன்.. " என்று பேசியதோடு மட்டுமல்லாலமல், பல நாக்கூசும் வார்த்தையால் திட்டியுள்ளார். இந்த வீடியோ வைரலாகவே காவல் துறையினர் இனியாவது இதுபோன்ற சில்வண்டுகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tic Tok Famous Rowdy Baby Surya Speech Abused Words to Condemn Police Officers


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->