15 இலட்சம் வரதட்சணையும் பத்தல... மாப்பிள்ளை வீட்டாரின் கொடூரம்.. பெண்ணை கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்ட பயங்கரம்.!
Thriuvarur married girl murder by husband family due to dowry
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேரளம் வாதண்டூர் கிராமத்தை சார்ந்தவர் பானு சந்தர் (வயது 35). இவர் சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில், காய்கறி கடையினை நடத்தி வருகிறார். கும்பகோணம் பகுதியை சார்ந்த நவநீத கிருஷ்ணன் மகள் ராதா (வயது 29). இவர்கள் இருவருக்கும் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
திருமணத்திற்கு பின்னர் பானுசந்தர், அவரது தாயார் சந்திரா மற்றும் அவரின் தங்கை சுஜிதா பானு ஆகியோர் சேர்ந்து, ராதாவிடம் வரதட்சணை கொடுமை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை நான்கு மணியளவில் ராதாவின் பெற்றோருக்கு தொடர்பு கொண்ட பானுசந்தரின் குடும்பத்தினர், ராதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும், அவரின் உடல் நன்னிலம் அரசு மருத்துவமனையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ராதாவின் பெற்றோர் நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்ற நிலையில், அவரின் முகம் மற்றும் காது, கழுத்து பகுதியில் காயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். பின்னர் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கிய நிலையில், ரூ.15 இலட்சம் அளவிற்கு சீர்வரிசை வழங்கியும், பானுசந்தரின் குடும்பத்தினர் மேலும் வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தது வந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Thriuvarur married girl murder by husband family due to dowry