செல்போனில் சிரித்து, சிணுங்கிய மனைவி.! வெறிப்பிடித்த கணவன் செய்த காரியத்தால் பறிபோன உயிர்.!  - Seithipunal
Seithipunal


திருப்பூரில் மனைவியின் மீது சந்தேகம் கொண்ட கணவன் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். 

திருப்பூரில் ஒரு தனியார் பனியன் கம்பெனியில் அப்துல்சமது என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மனைவி நிஷா பானு என்பவர், ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அப்துல்சமது வை மீண்டும் திருமணம் செய்து இருக்கின்றார். இவர்கள் இருவரும் திருப்பூர் காங்கயம் ரோட்டில் வசித்து வருகின்றனர்.

திருமணத்திற்கு பிறகும் நிஷா பானு தன்னுடைய நண்பர்களுடன் செல்போனில் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இதன்காரணமாக அப்துல் சமது தனது மனைவியின் பேரில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று அவர் வீட்டிற்கு வந்த போது நிஷா பானு தன்னுடைய செல்போனில் யாருடனோ நீண்ட நேரம் சிரித்து, சிரித்து பேசிக் கொண்டே இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்துல்சமது செல்போனை பிடுங்கி அழைப்பை துண்டித்துள்ளார். 

இதன் காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவர் மனைவியிடம் இருந்து செல்போனை பறிக்க முயற்சித்துள்ளார். ஆனால், நிஷாபானு செல் போனை கொடுக்க மாட்டேன் என்று அடம் பிடித்துள்ளார். 

இதன் காரணமாக ஆத்திரமடைந்த அப்துல் சமது அருகில் இருந்த சமயல் குக்கரை தூக்கி அவர் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனால், நிலைகுலைந்து கீழே விழுந்த நிஷாபானுவின் கழுத்தை கத்தியை எடுத்து அறுத்துள்ளார். 

பின்னர், தாமாகவே காவல் நிலையத்திற்கு சென்று, அப்தும் சமது சரணடைந்துள்ளார். தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து நிஷாபானு உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thrippur men attested who killed his wife 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->