தங்கள் கிராமத்துக்கு உதவ சென்று வாழ்வையே தொலைத்த 3 இளைஞர்கள்.!
three young boy died
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே மின்சாரம் தாக்கியதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிஅருகே உள்ள கோதையாறு, குற்றியார், மாறமலை, தச்சமலை, முடவன்பொற்றை ஆகிய மலை கிராமங்கள் உள்ளது. இதில் குற்றியார் பகுதியில் நேற்று இரவு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
இதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான சஜின் சலோ, 20 வயதான சுபாஷ் மற்றும் 25 வயதான மன்மதன் உள்ளிட்ட மூன்று இளைஞர்களும் குற்றியார் கிராமத்திற்கு மின்சாரம் வழங்கும் ஜீரோபாயிண்ட் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த மின் மாற்றியில் தங்கள் கிராமத்திற்கு வரும் மின் இணைப்பை சரி செய்ய அந்த மூன்று இளைஞர்களும் முயன்றதாகவும், அந்த சமயத்தில் மின்சாரம் தாக்கி மூன்று இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்
மூன்று இளைஞர்கள் உயிரிழந்து கிடப்பதைக் பார்த்த ஊர் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்து அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் மூவரின் உடல்களையும் உடல் கூறாய்விற்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.