ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி பலி.. ஆடுகள் குளிப்பாட்ட சென்றவர்களுக்கு நிகழ்ந்த சோகம்..!
Three girls from the same family drowned
ஆடுகளை குளிப்பாட்ட சென்ற சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அடுத்த சு.கம்பப்பபட்டு பகுதியில் வசித்து வருபவர் தில்ஷாத். இவருக்கு திருமணமாகி மனைவியும் ஐந்து பெண் குழந்தைகளும் உள்ளனர். நேற்று அவர்களின் வீட்டில் உள்ள ஆடுகளை குளிப்பாட்ட அவரது மகள்கள் நஸ்ரின் (15) நசீமா (15), ஷாகிரா (11) ஷப்ரின் (8) ஆகியோர் சென்றுள்ளனர்.
அப்போது ஏரியில் தண்ணீர் குடித்து கொண்டிருந்த ஆடுகளை விரட்ட சென்ற ஷப்ரின் ஏரியில் தவறி விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற சென்ற நசீமா, ஷாகிரா ஆகியோரும் தண்ணீரில் மூழ்கினர்.
இதனை கண்ட அவர்களது தங்கை ஷப்ரின் வீட்டுக்கு ஓடி சென்று நடந்தவற்றை கூறியுள்ளனர். உடனடியாக அவர்கள் சிறுமிகளை மீட்க முயன்றனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Three girls from the same family drowned