கொடூரம்., மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தாயும் மகளும் தற்கொலை முயற்சி.! அதிர்ச்சி செய்தி.!
thothukudi mother and daughter attempt suicide
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தாயும் -மகளும் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்ய முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஊனமுற்ற சிறுமியை ஒரு கொடூரன் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுவதை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தாயும் -மகளும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்தனர்.
அயன் பொம்மையாபுரத்தை சேர்ந்தவர் காளியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது 14 வயது ஊனமுற்ற மகளை, அதே பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவன், கடந்த 15ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
இதுகுறித்து காளியம்மாள் விளாத்திகுளம் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் ஐயப்பனை கைது செய்து, அவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், அந்த கொடூரன் ஐயப்பனை ஜாமினில் கொண்டு வரும் நடவடிக்கையில் காவல்துறையினர் சிலர் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்ததால், இதனை கண்டித்து காளியம்மாள் மற்றும் அவரது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட ஊனமுற்ற மகள் இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
thothukudi mother and daughter attempt suicide