தூத்துக்குடி வாலிபர் கொலை விவகாரம்.. தவிக்கும் காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரி தலைவன்வடலி கிராமத்தை சார்ந்தவர் பரமசிவன். இவரது மகன் சத்தியமூர்த்தி (வயது 20). இவர் தூத்துக்குடியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் வருடம் பயின்று வரும் நிலையில், நேற்று முன்தினம் வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. 

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனை பல இடங்களில் தேடிய நிலையில், மகன் அங்குள்ள உப்பாற்று ஓடை பகுதியில் முட்புதரில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக இருப்பதை கண்டுள்ளனர். பின்னர் இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கிடைக்கப்பட்டுள்ளது. 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சத்தியமூர்த்தியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், துண்டிக்கப்பட்ட தலையை தேடி வந்தனர். சத்தியமூர்த்தியின் தலை அங்கிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் முட்புதரில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், தலைவன்வடலி - கீழகீரனூர் பகுதியை சார்ந்த நபர்களுக்கு இடையே இருந்த தகராறு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மீண்டும் ஏற்பட்டதாகவும், இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும், முன்விரோதம் அல்லது பிற பிரச்சனைகள் காரணமாக சத்தியமூர்த்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர். கொலை செய்த நபர்கள் தொடர்பான துப்பு கிடைக்காமல் காவல் துறையினர் திணறி வரும் நிலையில், சந்தேகத்தின் கீழ் இருவரை கைது செய்துள்ளனர். பாதுகாப்பு கருதி காவல் துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi youngster murder case investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->