சுயேச்சை வார்டு உறுப்பினரை துடிதுடிக்க சம்பவம் செய்த கும்பல்.. தூத்துக்குடியில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் வார்டு உறுப்பினர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரம் ஊராட்சி பகுதியில் 8 ஆவது வார்டு உறுப்பினர் ஜெயக்குமார். 

இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில், கடந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு நேரத்தில் அவர் வீட்டு வாயிலில் அமர்ந்துகொண்டு இருந்த நிலையில், 8 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்துள்ளது. 

இந்த மர்ம கும்பல் ஜெயக்குமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ள நிலையில், இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஜெயக்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கியுள்ளனர். மேலும், தேர்தல் முன் விரோதத்தால் இவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi ward counselor murder by gang police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->