மகளின் காதல் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த தாய் எரித்துக்கொலை.. ரவுடி கணவன் கூட்டாளிகளுடன் சேர்ந்து சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


மகளை காதலனுடன் அனுப்பி வைத்த மனைவியை, கோவிலுக்கு அழைத்துச் சென்று கணவன் தீயிட்டுக் கொளுத்தி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் தெற்கு கல்மேடு கிராமத்திலிருந்து, துரைச்சாமிபுரம் செல்லும் சாலையில் மணிகட்டி மாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த 23 ஆம் தேதி பெண்ணின் சடலம் எரிந்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்ற நிலையில், முகம் மற்றும் உடல் கருகிய நிலையில் சடலத்தின் கழுத்துப் பகுதியில் வெட்டு காயங்கள் காணப்பட்டுள்ளன. அந்த சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர், இதுகுறித்து தருவைகுளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் தூத்துக்குடி நடராஜபுரம் பகுதியை சேர்ந்த ரவுடி முனியசாமி என்பவரின் மனைவி முருகலட்சுமி என்பதை அறிந்தனர். 

விசாரணையில், இந்த தம்பதியின் மகள் வெங்கடேஸ்வரி திருநெல்வேலி சட்டக் கல்லூரியில் இறுதி வருடம் பயின்று வரும் நிலையில், அவருக்கு உறவுக்கார இளைஞருடன் கடந்த 26 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்துள்ளது. திருமணத்திற்கு முந்தைய நாள் வீட்டில் இருந்து மாயமான மாணவி, தன்னுடன் படித்து வந்த வேறு ஜாதி இளைஞரை காதல் திருமணம் செய்துள்ளார். 

முருகலட்சுமி கொலை செய்யப்பட்ட நிலையில், கணவர் முனியசாமி தலைமறைவானதால் காவல்துறையினர் அவரது கூட்டாளிகளை பிடித்து விசாரித்துள்ளனர். இதன்போது மகளின் காதலை சேர்த்து வைத்த முருகலட்சுமி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. 

முனியசாமியின் தந்தைக்கு மூன்று மனைவிகள் உள்ள நிலையில், மூன்று மனைவிகளின் மூத்ததாரத்தின் பிள்ளை முனியசாமி என்பதால், அண்ணன் - தம்பிகள் இடையே எப்போதும் ஒற்றுமை அதிகளவு இருந்து வந்துள்ளது. 9 வழக்குகளில் தொடர்புடைய முனியசாமி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரது மனைவி மற்றும் மகளை மாமனார் பார்த்து வந்துள்ளார். 

கடந்த பிப்ரவரி மாதம் சிறையில் இருந்து முனியசாமி வெளியே வந்த நிலையில், மகள் வெங்கடேஸ்வரி தன்னுடன் பயிலும் வேறு ஜாதி இளைஞரை காதலிப்பது தெரிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், மகளுக்கு அவசரஅவசரமாக திருமண ஏற்பாடுகளை செய்த முனியசாமி, குற்ற வழக்குகளில் தொடர்புடைய தனது உறவுக்கார இளைஞரை மாப்பிள்ளையாக தேர்வு செய்துள்ளார். 

இந்த முடிவுக்கு மனைவி முருகலட்சுமி மறுப்பு தெரிவிக்கவே, ஏற்கனவே கணவன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மற்றொரு குற்றவாளியாக மாப்பிள்ளை வேண்டுமா? என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு கணவன் வெளியே சென்றிருந்த சமயத்தில், முருகலட்சுமி தனது மகள் காதலித்து வந்த சட்டக் கல்லூரி மாணவரை அழைத்து, பதிவு திருமணம் செய்ய தேவையான ஆவணங்களையும் கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். 

திருமணம் நின்று போனாலும் மகளை வேறு சாதியை சார்ந்த இளைஞருடன் மனைவி அனுப்பி வைத்தார் என்ற உண்மை தெரியவந்த நிலையில், முனியசாமி முதலில் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். பின்னர், சம்பவத்தன்று அங்குள்ள மணிகட்டி மாடசாமி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வரலாம் என முருகலட்சுமியை அழைத்துச் சென்றுள்ளார். 

அந்த காட்டுப்பகுதியில் ஏற்கனவே பெட்ரோல் மற்றும் ஆயுதங்களுடன் தயாராக இருந்த தனது சகோதரர்களுடன் சேர்ந்து, மனைவி முருகாலட்சுமியை கழுத்தை அறுத்து கொலை செய்து அடையாலம் தெரியக்கூடாது என்பதற்காக பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, முனியசாமியின் கூட்டாளிகளான தூத்துக்குடியை சேர்ந்த சுப்புராஜ், சங்கர், நீலமேகம், முத்துச்செல்வம் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தலைமறைவாகவுள்ள முனியசாமி மற்றும் முனியசாமிக்கு திட்டம் தீட்டி கொடுத்த அப்பகுதியை சார்ந்த பிரபல பண்ணையார் ஒருவரையும் தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Vilathikulam Mother Murugalatsumi Murder by Husband Rowdy Muniyasamy due to She Help Daughter Love


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->