கண்டித்த தந்தையை உலக்கையால் அடித்து கொலை செய்த மகன்.. தூத்துக்குடியில் பேரதிர்ச்சி.!
Thoothukudi Vilathikulam Father Murder By Son
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் எட்டயபுரம் குளவாய்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் நாட்டு வைத்தியம் மற்றும் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில், முதல் மனைவி ராஜாகனி மற்றும் மோகன் ராஜன் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 20 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் 23 வயதாகும் புருஷோத்தமன் என்ற மகன் உள்ள நிலையில், புருஷோத்தமனிற்கு டிப்ளமோ படிக்கும்போது ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்தி வீட்டில் இருந்துள்ளார். புருஷோத்தமன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படும் நிலையில், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனால் தினமும் ஒரு மாத்திரை சாப்பிட வேண்டிய சூழல் இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு மாத்திரை சாப்பிடாமல் இருக்கவே, தனது மகனை மாத்திரை சாப்பிட மோகன் ராஜ் வற்புறுத்தியுள்ளார். ஆனால், மோகன்ராஜ் பிடிவாதமாக மாத்திரை சாப்பிட முடியாது என்று கூறியுள்ளார்.
இதனால் தந்தை-மகன் என இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரிக்கவே, ஆத்திரமடைந்த புருஷோத்தமன் தனது தந்தையின் தலையில் உலக்கையால் அடித்து கொலை செய்துள்ளார். இதில், மோகன் ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து, புருஷோத்தமனை எட்டயபுரம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Thoothukudi Vilathikulam Father Murder By Son