நான் உன்னை காதலிச்சதெல்லாம் சும்மா.. உன்னைய கல்யாணம் பண்ணுவேனா?.. காவலருக்கு அதிகாரிகள் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் அடைக்கலபுரம் பகுதியைச் சார்ந்தவர் ஜாக்சன். இவர் கடந்த 2018 ஆம் வருடத்தில் காவல் துறையில் பணியில் சேர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். 

அரசியல் பிரமுகர் ஒருவரின் தனி பாதுகாவலராக இருந்து வந்த ஜாக்சனிடம், அதே ஊரை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவர் அரசு போட்டித் தேர்வில் பங்கேற்பதற்காக புத்தகங்கள் தொடர்பாக கேட்டு தெரிந்து உள்ளார். இதன் போது பெண்ணின் செல்போன் நம்பரை பெற்ற ஜாக்சன், அவரிடம் தன்னை ஒரு பெரிய வீரன் போல காண்பித்து மணிக்கணக்கில் பேசி காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறான். 

கடந்த ஒரு வருடமாக இளம் பெண்ணுடன் காதல் லீலையில் ஈடுபட்டு வந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக காரில் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று அத்துமீறி இருக்கிறான். இந்நிலையில், காவலர் ஜாக்சனிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள இளம்பெண் வற்புறுத்திய நிலையில், தான் ஒரு காவல் அதிகாரி என்றும் உன்னை எப்படி நான் திருமணம் செய்து கொள்வேன்? என்றும் தெரிவித்துள்ளார். 

இதனால் ஏமாற்றமடைந்த இளம்பெண் கடந்த 17ஆம் தேதி திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அரசியல் கட்சியினரின் தலையீடு காரணமாக இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படாமல் இருந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் புகார் அளித்ததையடுத்து, இது தொடர்பான விசாரணை நடந்துள்ளது. 

இந்த விசாரணையை அடுத்து, காவலர் ஜாக்சன் மீது இளம் பெண்ணை காதலித்து ஏமாற்றியது, பாலியல் பலாத்காரம் செய்தது உட்பட 5 வழக்கு பிரிவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில், இதனை அறிந்து ஆயுதப்படை காவலர் ஜாக்சன் தலைமறைவாகியுள்ளார். ஆயுதப்படை காவலர் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Thiruchendur Police Cheated Young Woman Higher Officials Register Complaint 27 June 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->