முயல் வேட்டையில் தீவிரம்.. துடிதுடிக்க உயிரிழந்த சிறுவன்.. சாத்தான்குளத்தில் சோகம்.!!
Thoothukudi Sathankulam youngster died
முயல் வேட்டைக்கு சென்ற சிறுவன், ஈட்டி பாய்ந்து உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் அம்பலசேரி மேலத்தெரு பகுதியை சார்ந்த சிறுவன் இசக்கிமுத்து (வயது 14). இசக்கிமுத்து அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்த சிறுவன் சம்பவத்தன்று தனது சகோதரர் சுடலை மற்றும் தனது நண்பர்கள் ஆறு பேருடன் முயல் வேட்டைக்கு சென்றுள்ளான். அங்கு முயல் பிடிப்பதில் அனைவரும் ஆர்வமாக இருந்த நிலையில், இசக்கிமுத்துவின் நண்பர்கள் முயலை கண்டுள்ளனர்.
இதனையடுத்து முயலை பிடிக்க ஈட்டியை வேகமாக செலுத்திய நிலையில், அது எதிர்பாராத விதமாக இசக்கிமுத்துவின் தலையில் பாய்ந்துள்ளது. உயிருக்கு போராடிய இசக்கி முத்துவை திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி இசக்கிமுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Thoothukudi Sathankulam youngster died