நிவாரணம் வழங்குக.. கல்விளை சிறுமி பாலியல் பலாத்காரம், கொலையில் உறவினர்கள் போர்க்கொடி..! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில், சாத்தான்குளம் அருகே கல்விளை என்ற கிராமத்தின் ஓடை பாலத்திற்கு அருகே சில இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்துள்ளனர். அப்போது, அப்பகுதியில் தொடர்ந்து துர்நாற்றம் வீசி வந்துள்ளது. இதனால், அவர்கள் சந்தேகமடைந்து அப்பகுதிக்குச் சென்று பார்த்த பொழுது, மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாயினர். 

அங்கிருந்த தண்ணீர் நிரப்பும் ட்ரம்மொன்றில் 9 வயது சிறுமி உதடு மற்றும் கழுத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து, உடனடியாக ஊருக்குள் சென்று அவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், சாத்தான்குளம் காவல்துறையினருக்கு இந்த தகவல் கொடுக்கப்பட்டது. 

விரைந்து வந்த அவர்கள் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் வழக்கு பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், அந்த சிறுமி கல்விளை கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், 19 வயது இளைஞர்கள் இருவர் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது பக்கத்து வீட்டு சிறுமியான இவர் டிவி பார்க்க வந்துள்ளார். அவர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த விஷயம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்க தயாராக இருந்த நிலையில், சிறுமியின் உறவினர்கள் திடீர் போராட்டத்தை கையில் எடுத்தனர். மேலும், நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் இங்கு வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் வரும் வரை சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என்று, சிறுமியின் உடலை வைத்துள்ள பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Sathankulam Kalvilai child sexual abuse murder Relatives pretest for money


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->