ஆட்டுக்குடல் சைடிஸ் கேட்டதில் தகராறு.. மதுபோதையில் நண்பனை கொலை செய்த ஆருயிர் நட்பூ.!
Thoothukudi Sathankulam Friend Murder by Another One When Drinking Alcohol 4 July 2021
மதுபானம் அருந்த சைடிஸ் வாங்கிக்கொடுக்காத நண்பனை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் தஞ்சைநகரம் தெற்கு தெரு பகுதியை சார்ந்தவர் அருமைக்கொடி (வயது 58). இவரது நண்பர் செல்வராஜ் (வயது 54). இவர்கள் இருவரும் கடந்த 2 ஆம் தேதியன்று, அங்குள்ள புதுக்குளம் பகுதியில் உள்ள காலியிடத்தில் மதுபானம் வாங்கி அருந்தியுள்ளனர்.
மதுபோதையில் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே, சம்பவ இடத்திற்கு வந்த செல்வராஜின் மகன் தாவீது (வயது 24) தந்தைக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதனால் வாய்த்தகராறு மேலும் அதிகரிக்க, செல்வராஜ் மற்றும் தாவீது சேர்ந்து அருமைகொடியை துண்டால் கழுத்தை இறுக்கி, தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளனர்.
கொலையை அரங்கேற்றிய இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், இந்த விஷயம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அருமைகொடியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மேற்கொண்ட விசாரணையில், போதை தகராறில் கொலை அரங்கேறியது உறுதியானது. கொலையாளிகளை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், தீவிர தேடுதலுக்கு பின்னர் செல்வராஜ் மற்றும் தாவீது கைது செய்யப்பட்டனர்.
கொலைக்கான காரணமாக செல்வராஜ் மற்றும் தாவீது அளித்த வாக்குமூலத்தில், " அருமைகொடியுடன் செல்வராஜ் ஆகிய நான் கூலிவேலைக்கு சென்று வந்தேன். நாங்கள் இருவரும் நண்பர்கள். சம்பவத்தன்று நான் மதுபானம் அருந்த அருமைகொடியை அழைத்து சென்றேன்.
மேலும், மதுபானத்துக்கு சைடிஷாக ஆட்டுக்குடல் வாங்கி தருவதாகவும் கூறிய நிலையில், மதுபோதையில் அருமைக்கொடி ஆடுகுடல் சைடிஸ் கேட்டார். போதையில் நான் ஆட்டுக்குடல் வாங்கி தர முடியாது என கூறவே, என்னை அருமைக்கொடி அவதூறாக பேசினார்.
சம்பவ இடத்திற்கு எதற்ச்சையாக வந்த எனது மகன் தாவீதையும் அவதூறாக பேசவே, நாங்கள் இருவரும் ஆத்திரமடைந்து அருமைகொடியை கொலை செய்தோம் " என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. செல்வராஜ் மற்றும் தாவீதை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Thoothukudi Sathankulam Friend Murder by Another One When Drinking Alcohol 4 July 2021