தூத்துக்குடி புள்ளிங்கோவின் அட்ராசிட்டி... அன்பாக கண்டித்து நூதன தண்டனை வழங்கிய காவல்துறை.!!
thoothukudi pullingo punished by police for tic tok video
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள லெவெஞ்சிபுறம் மற்றும் முனியாபுரம் பகுதியை சார்ந்த 3 நபர்கள்., தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு முன்னதாக நின்று கொண்டு இருந்த ஜீப்பின் மீது ஏறி டிக் டாக் செய்தனர்.
மேலும்., நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில் வரும் வசனத்தினை வைத்து டிக் டாக் செய்துள்ளனர். இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகவே., பெரும் வைரலாக வீடியோ அப்பகுதியில் உலாவியுள்ளது.
இதனையடுத்து இதனை கண்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு., 3 வாலிபர்களை கண்டறிந்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்கு பின்னர் இவர்கள் மூவருக்கும் காவல் துறை அதிகாரியின் சிரமத்தை உணர்வதற்கு அங்குள்ள மார்க்கெட் சிக்னலில் எட்டுமணிநேரம் போக்குவரத்து சரி செய்யும் பணியை வழங்கி உத்தரவிட்டனர். இந்த சம்பவம் நெட்டிசன்களிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
thoothukudi pullingo punished by police for tic tok video