ஒரு மணிநேரம் காத்திருந்தால்.., அவசரத்துடன் நடந்த பணியால் அரங்கேறிய விபத்து.! கூலித்தொழிலாளி முகம் சிதைந்து பலி.!!
Thoothukudi Petrol Tank fire Accident 1 Died 1 Injured
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் ஏ.ஆர்.ஏ.எஸ் அண்ட் கோ என்ற பெயரில், பாரத் பெட்ரோல் நிரப்பும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பெட்ரோல் சேமித்து வைக்கும் டேங்க்கில், ஒரு டேங்க்கை சுத்தம் செய்வதற்காக மூடியை தொழிலாளர்கள் திறந்தனர்.
நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த அந்த பெட்ரோல் டேங்க் திறக்கப்பட்டதும், திரவமாக இருந்த பெட்ரோல் வாயுவாக மாறி ஆவி போல அதிக அழுத்தத்துடன் வெளியேறியுள்ளது. இதனை சாதாரண தூசி புகை என்று எண்ணிய தொழிலாளர்கள், மீதமுள்ள வாயுவை வெளியேற்ற சிறிய வகை மின் விசிறியை கம்பியில் கட்டி உள்ளே இறக்கியுள்ளனர்.
இந்நிலையில், மின்விசிறியை ஆன் செய்ததும், அதிலிருந்து உருவாகிய தீப்பொறியால் வாயு நிலையில் இருந்த பெட்ரோல் வெடித்துள்ளது. இந்த விபத்தில், மின்விசிறி தூக்கி வீசப்பட்டு ரகு என்ற தொழிலாளியின் முகத்தில் அடித்து, முகம் சிதைந்து அங்கேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மற்றொரு தொழிலாளியான ஜஸ்டின் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில், பெட்ரோல் டேங்க் மூடியை திறந்ததும் ஒருமணிநேரம் அப்படியே விட்டிருந்தால் வாயு நிலையில் இருந்த பெட்ரோல் தானாக காற்றில் கலந்து வெளியேறியிருக்கும் என்று தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Thoothukudi Petrol Tank fire Accident 1 Died 1 Injured