குலசேகரநல்லூர் ஸ்ரீ சுடலைமாடசாமி கோவிலில் திருட்டு முயற்சி.. 2 பேரை விரட்டிப்பிடித்த பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


ஓட்டப்பிடாரம் அருகே கோவில் உண்டியலை திருட முயற்சித்த இரண்டு நபர்களை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து காவல் துறையினர் வசம் ஒப்படைத்தனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் குலசேகரநல்லூரில் ஸ்ரீ சுடலைமாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் நேற்று நள்ளிரவு நேரத்தில் வருகை தந்த இரண்டு நபர்கள், கோவிலின் சி.சி.டி.வி காமிராவை உடைத்து சேதப்படுத்தி, உண்டியலை திருட முயற்சி செய்துள்ளனர். 

கோவிலுக்கு உள்ளே மர்ம நபர்களின் நடமாட்டத்தை கண்ட அப்பகுதிவாசி ஒருவர், ஊராருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கிராம மக்கள் திரளாக திரண்டு வந்து திருடர்களை விரட்டியுள்ளனர். மக்கள் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த திருடர்கள், அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

கோவிலுக்கு திருட வந்த இருவரும் மதுபோதையில் இருந்த நிலையில், ஒருவர் தடுக்கி விழுந்து தலையில் பலத்த காயத்துடன் பிடிபட்டார். மற்றொருவரை கிராம மக்கள் விரட்டிப்பிடித்த நிலையில், இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த ஓட்டப்பிடாரம் காவல் துறையினர், 2 திருடர்களையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Ottapidaram Kulasekaranallur Robbery Attempt at Sri SudalaiMadasamy Temple


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->