தனிக்குடித்தனம் போகச்சொல்லி வற்புறுத்திய மாமியார்.. சடலமாக மீட்கப்பட்ட சோகம்.!!
Thoothukudi New married youngster suicide due to his wife mothers torture
மாமியார் திட்டியதால், மருமகன் மனமுடைந்து தூக்கிட்டு சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரத்தை அடுத்துள்ள புதியம்புத்தூர் பகுதியை சார்ந்தவர் கிருஷ்ணகுமார். இதே பகுதியை சார்ந்த பெண்மணி ஜான்சி. இவர்கள் இருவருக்கும் கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
திருமணம் முடிந்த புதுமண ஜோடிகள் தங்களின் இல்லற வாழ்க்கையை இனிமையாக துவக்கிய நிலையில், கிருஷ்ணகுமார் தனது தாய், தந்தையுடன் தங்கியிருந்து வந்துள்ளார். இந்த நிலையில், ஜான்சியின் தாயார் இந்துமதி, தனது மருமகனிடம் தனிக்குடித்தனம் வர சொல்லி பிரச்சனை செய்ததாக தெரியவருகிறது.
தாய், தந்தையை பிரிந்து வர மனமில்லாது இருந்து வந்த கிருஷ்ண குமார், இந்த பிரச்சனையால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாமியார் இது குறித்து மீண்டும் மருமகனிடம் பிரச்சனை செய்துள்ளார்.
இதனால் மனவிரக்திக்கு உள்ளாகிய கிருஷ்ண குமார், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து இந்துமதியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Thoothukudi New married youngster suicide due to his wife mothers torture