காரில் கடத்தி சென்று அரங்கேறிய கொலை.. சென்னையில் சரண்.. தூத்துக்குடியில் அடுத்தது சம்பவங்கள்.!
Thoothukudi Murder Case police investigation 21 September 2020
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடி குடியிருப்பை சேர்ந்தவர் செல்வம் தண்ணீர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் செல்வத்திற்கும் அதிமுக பிரமுகர் திருமணவேல் என்பவருக்கும் அதே பகுதியில் உள்ள நில தகராறு கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது.
இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் எதிர் தரப்புக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி செல்வம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணையின் போது காவல்துறை தனக்கு எதிராக செயல்படுவதாக செல்வம் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இந்த நிலையில் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனையும் இந்த வழக்கில் சேர்க்கலாமா? என்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே நேற்று முன் தினம் காலை செல்வம் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சமயத்தில் அவரை வழி மறித்த மர்ம கும்பல் செல்வத்தை காரில் கடத்தி சென்று நெல்லை மாவட்டம் திசையன்விளை என்ற காட்டுப்பகுதியில் அவரை கொலை செய்து விட்டு உடலை அங்கேயே விட்டு சென்றனர். சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, செல்வதை கொலை செய்தது சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அதிமுக பிரமுகர் திருமணவேல் தான் எனவே குற்றவாளி இருவரையும் கைது செய்து வேண்டும் என செல்வத்தின் உறவினர்கள் நான்கு நாட்களாக போராடி வருகின்றனர்.
இத்தகைய சூழலில் நெல்லை மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அதிமுக பிரமுகர்கள் திருமணவேல் உள்ளிட்ட சிலர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிரட்டார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அதிமுக பிரமுகர் திருமணவேல் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிமன்றத்தில்சரணடைந்த அதிமுக பிரமுகர் திருமணவேல் மற்றும் முத்துகிருஷ்ணன் என்பவரையும் மூன்று நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்திரவிட்டார். இதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
English Summary
Thoothukudi Murder Case police investigation 21 September 2020