காதல் திருமணம் செய்த 20 நாட்களில் தங்கைக்கு வரதட்சணை கொடுமை.. பாசக்கார அண்ணனின் பரபரப்பு சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிவகளை பகுதியைச் சார்ந்தவர் விக்னேஷ் ராஜா. இவர் அங்குள்ள பொறியியல் கல்லூரியில் மூன்றாம் வருடம் பயின்று வருகிறார். சில வருடங்களுக்கு முன்னதாக பொட்டல் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில், அவ்வூரைச் சார்ந்த சங்கீதா என்ற பெண்ணை கண்ட விக்னேஷிற்கும், சங்கீதாவிற்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. 

இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவராக இருந்த நிலையில், விக்னேஷின் குடும்பம் பொருளாதாரத்தில் பின்தங்கிய இருந்ததாகவும், சங்கீதாவின் பெற்றோர் இருவருமே அரசு ஊழியர் என்பதால் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

இந்த எதிர்ப்பை மீறி கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக விக்னேஷ் ராஜா - சங்கீதா ஜோடியின் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. வேறு வழியின்றி சங்கீதாவின் பெற்றோரும் சமாதானத்திற்கு வந்த நிலையில், சங்கீதாவின் அண்ணன் முத்துராமலிங்க ராஜாவுக்கு இந்த திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லை. காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி சங்கீதாவின் பெற்றோருடைய ஏரல் சொந்த வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், புது மாப்பிள்ளையான விக்னேஷ் ராஜாவை, தனது தாய் வீட்டில் இருந்து வந்த சங்கீதாவின் அண்ணன் முத்துராமலிங்க ராஜா அரிவாளால் வெட்டியுள்ளார். இதனை தடுக்க வந்த தாய் முத்துப்பேச்சி மற்றும் காதலுக்கு தூது போன நண்பர் அருண் மகேஷ் ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த தாய் முத்துப்பேச்சி மற்றும் நண்பர் அருண் மகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

உயிர் தப்பிய மாப்பிள்ளை விக்னேஷ் ராஜா மற்றும் அவரது தந்தை லட்சுமணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மூவரைக் கைது செய்தனர். 

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முத்துராஜா, அவரது உறவினர் முத்துச்சுடர், நண்பர் அருணாச்சலம் ஆகியோரை கைது செய்த நிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வீட்டு பெண்ணின் மனதை கெடுத்து காதலித்து வந்த நிலையில், தங்குவதற்கு சொந்த வீட்டையும் கொடுத்திருந்த சூழ்நிலையில், மேலும் 40 பவுன் நகை கேட்டு தனது தங்கையை வரதட்சணை கொடுமை படுத்துவதாகவும், இதனால் ஆத்திரமடைந்த நான் அவர்களை வீடு புகுந்து வெட்டியதாகவும் தெரிவித்துள்ளார். 

காதல் திருமணம் செய்து, பெண்ணின் பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தங்க வீடும் சொந்தமாக அளித்திருந்த சூழலில், இருக்க இடம் கொடுத்தால், படுக்க பாய் மற்றும் தலையணை கேட்ட கதையாக மேற்படி நகைக்கு காதல் மனைவியை அடித்து துன்புறுத்தியதால், தங்கையின் மீது கொண்ட பாசத்தால் அண்ணன் அரங்கேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Love marriage dowry problem murder police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->