டீ குடிக்க சென்ற பெயிண்டர் கழுத்தறுத்து கொலை.. கோவில்பட்டியில் அதிர்ச்சி..!!
Thoothukudi Kovilpatti Painter Madan Kumar Murder by Strangers Police Investigation 30 July 2021
தேநீர் கடைக்கு சென்றவர் மர்ம நபர்களால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ஸ்டாலின் காலனி பகுதியை சார்ந்தவர் மதன்குமார் (வயது 21). இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். அவ்வப்போது பெயிண்டிங் வேலைகள் இல்லாத நேரத்தில் சமையல் செய்யும் வேலைக்கும் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை மதன்குமார் தேநீர் குடித்துவிட்டு வருவதாக கூறி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர், நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாத நிலையில், அதிர்ச்சியடைந்த அவரின் குடும்பத்தினர் பல இடங்களில் மதனை தேடியுள்ளனர்.
அவர் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், மந்தித்தோப்பு தனியார் குடிநீர் நிறுவனம் அருகேயுள்ள பகுதியில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மதன் குமார் பிணமாக கிடந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதன்குமாரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? முன்விரோதம் சார்பாக கொலை நடந்ததா? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Thoothukudi Kovilpatti Painter Madan Kumar Murder by Strangers Police Investigation 30 July 2021