உறவுக்கார சிறுமியை திருமணம் செய்ய குடும்பத்துடன் பிளான் போட்டு கடத்திய கொடூரன்.. சினிமா பாணியில் தப்பித்த சிறுமியின் வாழ்க்கை.!!
Thoothukudi Kidnapped girl Rescued by Dharmapuri Police
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொங்கரைக்குறிச்சி பகுதியை சார்ந்த 17 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்றுவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி சிறுமியை, பழனியப்பாபுரம் பகுதியை சார்ந்த முத்து (வயது 23) என்பவர் கடைக்கு செல்லலாம் என்று கூறி காரில் அழைத்து சென்றுள்ளார்.
சிறிது தூரம் கார் சென்றவுடன், சிறுமியை தான் வந்திருந்த காரில் இருந்து இறக்கிவிட்டு, அங்கு தயாராக இருந்த மற்றொரு காரில் வலுக்கட்டமாக ஏற்றி கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாய் இந்த விஷயம் குறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், நேற்று விடியற்காலை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் - திருவண்ணாமலை சாலையில் உள்ள செல்லம்பட்டி பிரிவு அருகே காவல் துறையினரின் வாகன தணிக்கையில் ஈடுபடுகையில் காவல் துறையினரை உஷார் படுத்தியுள்ளார்.
இதனையடுத்து சிறுமி எதோ பிரச்சனையில் இருக்கிறார் என்பதை உணர்த்த காவல் துறையினர், அதிரடியாக செயல்பட்டு வாகனத்தில் இருந்தவர்களை அப்படியே காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
இதில், சிறுமியை கடத்தி வந்தது அவரது அதை மகன் முத்து, முத்துவுக்கு உதவியாக அவரது தந்தை திரவியம் (வயது 55) மற்றும் 17 வயது சிறுவன், திருவண்ணாமலையை சார்ந்த ஓட்டுநர் ராஜா (வயது 47) ஆகியோரை கைது செய்துள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்ய முயற்சித்தும் உறுதியானது. சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கைதானவர்களை காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Thoothukudi Kidnapped girl Rescued by Dharmapuri Police