தவறான சிகிச்சை.. தனியார் மருத்துவமனை அலட்சியத்தால், ஒன்றரை வயது குழந்தை பலி.! - Seithipunal
Seithipunal


தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி வெயிலாட்சி. இவர்கள் இருவருக்கும் ஒன்றரை வயதுடைய தமிழரசன் என்ற மகன் இருக்கிறான். கடந்த 27ஆம் தேதி கைக்குழந்தை தமிழரசனுக்கு திடீரென உடல் நலக்குறைவு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 

குழந்தையை அங்குள்ள கோகுலம் கிளினிக் என்ற தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அங்கு மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள் தமிழரசனுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். நள்ளிரவில் குழந்தைக்கு திடீரென வலிப்பு மற்றும் உடல் நடுக்கம் ஏற்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 

இதனை செவிலியர்களிடம் கூறியும் கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், மருத்துவரை உடனடியாக அளிக்குமாறு வைத்த கோரிக்கையும் பலனில்லாமல் போயுள்ளது. மறுநாள் காலையில் மருத்துவமனைக்கு வந்த மருத்துவர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். 

மற்றொரு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த பெண்மணி, இந்த கோகுலம் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் முறையான பயிற்சி பெற்றவர்கள் இல்லை என்றும், குழந்தைகளுக்கு அதிக அளவு மருந்து கொடுக்கப்பட்டதே இறப்புக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Gogulam hospital Wrong Treatment Baby Died


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->