8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... வலைவீசிய காவல்துறையால் தூக்கில் தொங்கிய காமுகன்..!!
Thoothukudi girl sexual torture culprit attempt suicide
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் கே.சுப்பிரமணியபுரம் பகுதியை சார்ந்தவர் ராமமூர்த்தி (வயது 56). இதே கிராமத்தில் 8 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று காமுகன் ராமமூர்த்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். மேலும், இது குறித்து யாரிடமும் கூற கூடாது என்று கூறியுள்ளார். வீட்டிற்கு சென்ற சிறுமி அழுதுகொண்டே இது குறித்து தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், காமுகன் ராமமூர்த்தி தலைமறைவாங்கினான்.
இந்த நிலையில், அந்த ஊர்பகுதியில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு ராமமூர்த்தி தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, ராமமூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இவன் அவமானத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Thoothukudi girl sexual torture culprit attempt suicide