திரௌபதியில் கூறிய அதே போலி திருமண சான்றிதழ் பிரச்சனை.. தூத்துக்குடி பெண்மணி நீதிமன்றத்தில் வழக்கு.!
Thoothukudi girl file complaint in Madurai court about Fake Marriage certificate torture
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், " நான் 12 ஆம் வகுப்பு படிக்கும்போது டார்வின் என்பவர் எனக்கு ஒரு தலைக்காதல் தொல்லை கொடுத்து வந்தார்.
நான் படிப்பை முடித்ததும், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தேன். இந்நிலையில், அவருக்கும் - எனக்கும் தூத்துக்குடியில் உள்ள ஒரு தேவாலயத்தில், கடந்த 2017 ஆம் வருடம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி திருமணம் நடைபெற்று உள்ளதாக சார்பதிவாளர் அலுவலகத்தில் சான்றிதழ் பெற்று பிரச்சனை செய்து வருகிறார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் படி, போலி ஆவணங்கள் மூலம் திருமணம் நடைபெற்று சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. திருமணம் குறித்து ஆலயத்தின் தந்தையிடம் கேட்டபோது, குறிப்பிட்ட அந்த நாளில் ஆலயத்தில் திருமணம் நடக்கவில்லை என்றும், அந்த சான்றிதழை தான் வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
திருமணம் நடந்ததாக கூறப்படும் நாளில், நான் தூத்துக்குடியில் இல்லை. கல்லூரி செய்முறை தேர்வில் பங்கேற்க வந்தேன். அந்த வருகை பதிவேடு என்னிடம் உள்ளது. திருமண செய்துவிட்டதாக கூறி தன்னுடன் சேர்ந்து வாழுமாறு என்னை டார்வின் மிரட்டுகிறார். கீழூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட திருமண பதிவு சான்றிதழை இரத்து செய்யுமாறு உத்தரவிட வேண்டும் " என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி, இவ்வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பதிவாளர், கீழூர் சார்பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, இவ்வழக்கு விசாரணையை நவம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அறிவிப்பதாக தெரிவித்தார்.
இதுபோன்ற போலி திருமண சான்றிதழால் அரங்கேறிய பல கொலைகளும், கொள்ளைகளும், பெண் வீட்டாரின் தற்கொலைகளும் திரௌபதி திரைப்படத்திலேயே தெளிவாக கூறப்பட்டுவிட்டது. காதல் என்ற போர்வையில் அரங்கேறும் கொடூரங்களுக்கு தகுந்த சட்ட ரீதியான தண்டனை வழங்கினால் மட்டுமே பெண் பிள்ளைகளின் எதிர்காலம் நலம்பெறும் என்பது சமூக ஆர்வலர்களின் குரலாக இருக்கிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Thoothukudi girl file complaint in Madurai court about Fake Marriage certificate torture