ஹெலோ ஆப் காதல்... 18 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய வாலிபர்.. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் பிள்ளையார்குப்பம் பகுதியில் சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியே சென்று வருவதாக கூறி, வெளியே சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பவில்லை. சிறுமியை பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

இதனையடுத்து இது குறித்த அங்குள்ள விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். இந்த விசாரணையில், சிறுமி பெரம்பலூரில் இருப்பது தெரியவந்துள்ளது. 

பின்னர் பெரம்பலூருக்கு சென்ற காவல் துறையினர் சுரேஷ் என்ற வாலிபருடன் இருந்த சிறுமியை மீட்டனர். பின்னர் இது குறித்த மேற்கொண்ட விசாரணையில், சிறுமியை காமுகன் ஹெலோ செயலில் காதல் மழை பொலிந்து கவர்ந்துள்ளான். 

சிறுமியை தனது சொந்த ஊரான பெரம்பலூருக்கு தூத்துக்குடியில் இருந்து அழைத்து வந்ததும், குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமியை மீட்ட காவல் துறையினர், சுரேஷின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi girl cheated youngster arrest by police in Perambalur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->