சரக்கடித்து ஊர் சுற்றிய நண்பர்கள்.. பெற்றோர்கள் கண்டித்ததால் விபரீத முடிவு.!!
Thoothukudi friends died
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரும்பூர் யோகரத்தினம் பகுதியை சார்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் பூச்சிமுத்து (வயது 18). பொன்ராஜின் மகன் அஜித்குமார் (வயது 22). இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்த நிலையில், பூச்சிமுத்து கோயம்புத்தூரில் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். அஜித்குமார் சென்னையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
ஊரடங்கின் காரணமாக சொந்த ஊருக்கு இருவரும் வந்த நிலையில், இருவரும் எந்த பணிகளுக்கும் தற்போது செல்லாமல் இருந்துள்ளனர். மேலும், இருவரும் ஒன்று சேர்ந்து ஊர் சுற்றுவதுமாகவும், மது அருந்தியும் இருந்து வந்துள்ளனர்.
இதனால் இருவரின் பெற்றோர்களும் இருவரையும் கண்டித்துள்ளனர். இதன் காரணமாக கடுமையான மன உளைச்சலுக்கு உள்ள இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். நேற்று இரவு குரும்பூர் இரயில் நிலையத்திற்கு அருகில் குருணை மருந்தை மதுவில் கலந்து குதித்துள்ளனர்.
இதில் இருவரும் சம்பவ இடத்தியிலேயே பரிதாபமாக பலியான நிலையில், இவர்கள் இருவரையும் காணாது பெற்றோர்கள் விடிய விடிய இருவரையும் தேடியுள்ளனர். இதன் பின்னரே இவர்கள் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.
இதன்பின்னர் இது குறித்த தகவல் காவல் துறையினருக்கு தெரியப்படுத்திய நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பூச்சிமுத்து மற்றும் அஜித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், இருவரும் பெற்றோர்களின் கண்டிப்பால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
Tamil online news Today News in Tamil