தூத்துக்குடி: மூதாட்டி கொலை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு..!
Thoothukudi Eral Aged Lady Murder When Robbery Attempt
5 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ளது வாழ்வலான். இந்த பகுதியில் துரைபாண்டி (வயது 79) என்பவர் தனது மனைவி முத்துகிளியுடன் (65) வசித்து வருகிறார். இவர்களின் பிள்ளைகள் திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர். இதனால் கணவன் மனைவி மட்டும் அவர்களின் பண்ணை வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
இன்று அதிகாலை முத்துகிளி வழக்கம் போல் வாசலுக்கு சென்றுள்ளார். அங்கு வந்த மர்மநபர்கள் முத்துகிளியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை கண்டுள்ளனர். அதனை அவரிடம் இருந்து அபகரிக்க முயன்ற அவர்கள் கட்டையால் முத்துகிளியின் தலையில் தாக்கியுள்ளனர். இதனால், சம்பவ இடத்திலேயே முத்துகிளி பரிதாபமாக உயிரிழந்தார். மர்ம நபர்கள் 5 பவுன் நகையுடன் தப்பி சென்றனர்.
நீண்ட நேரம் ஆகியும் மனையியை காணாததால் சந்தேகமடைந்த துரைபாண்டி வாசலில் வந்து பார்த்துள்ளார். அங்கு முத்துகிளி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முத்துகிளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனியாக இருந்த மூதாட்டி நகைக்காக கொலை செய்யபட்டது அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
English Summary
Thoothukudi Eral Aged Lady Murder When Robbery Attempt