கல்லூரி பேராசிரியை கடத்தல்.. அதிரடியாக செயல்பட்ட காவல்துறை..! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அப்பனேரி பகுதியை சார்ந்தவர் பாலமுருகன் (வயது 35). இவர், இக்கிராமத்தை சார்ந்த கல்லூரி பேராசிரியையுடன் பழகி வந்துள்ளார். இதனை அறிந்த பேராசிரியையின் பெற்றோர் கண்டித்துள்ளனர். 

இதன்பின்னர், கல்லூரி பேராசிரியை பலமுருகனிடம் பேசுவதை தவிர்த்து வந்த நிலையில், நேற்று மாலை நேரத்தில் பேராசிரியை கோவில்பட்டி அருகே நடந்து வந்துகொண்டு இருந்துள்ளார். அந்த நேரத்தில் காரில் வந்த பாலமுருகன், அவரை கடத்தி சென்றுள்ளார். 

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பேராசிரியை அலைபேசி எண் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படை காவல் துறையினர், பாலமுருகன் மற்றும் கடத்தலுக்கு உடைந்தையாக இருந்த விஜய் (வயது 27) என்பவரையும் கைது செய்து, கல்லூரி பேராசிரியையை மீட்டுள்ளனர்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi College Lecturer Kidnapped Police Rescued


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->