தூத்துக்குடியில் சிறுமி பாலியல் பலாத்காரம் கொலை.. கைதான காமுகன்கள்.. தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி..!!
Thoothukudi child sexual abuse murder police arrest culprit
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கல்விளை பகுதியை சார்ந்தவர் உச்சிமாகாளி. இவருக்கு 7 வயதுடைய மகள் இருக்கிறார். இவர் சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றுள்ளார்.
சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாமல் இருந்த நிலையில், சிறுமியை காணாது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தேடி அலைந்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறுமி அங்குள்ள காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது முதலிலேயே தெரியவந்ததை தொடர்ந்து, இது குறித்து விசாரணை மேற்கொண்டு அங்குள்ள மாணிக்கபுரம் பகுதியை சார்ந்த முத்தீஸ்வரன் உட்பட இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை பிரச்சனையை தடுக்க சட்டங்கள் கடுமையாக மாற்றப்படவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், இது போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது பெரும் அதிர்வலையை பதிவு செய்கிறது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பிரச்சனையில் மக்கள் சட்டத்தை கையில் எடுத்தால் முடிவுகள் எப்படி வேண்டும் என்றாலும் மாறலாம்.. அதனை கருத்தில் கொண்டு அரசு இது போன்று குற்றம் இழைக்கும் நபர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று மக்கள் தொடர் கோரிக்கையை வைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
Thoothukudi child sexual abuse murder police arrest culprit