மாவட்டத்திற்கே நாங்கதான் சப்ளை.. ஏகபோகமாக நடந்த விற்பனை.. தூக்கிய காவல்துறை.!
Thoothukudi ADMK Party Member Kanja Sales Police Investigation
தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காவல் துறையினரும் கஞ்சா விற்பனையை முடக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், பலனில்லாது கஞ்சா விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனையானது அதிகரித்து வருவதாக காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில், காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று காவல் துறையினர் வழக்கமான கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், சந்தேகத்திற்கு இடமான நபர்களை பிடித்து விசாரணை செய்துள்ளனர். இதில், தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா சப்ளை செய்து வந்த மணிகண்டன் என்ற நபரை காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணை செய்ததில் இவர் அதிமுக பிரமுகர் என்பதும் தெரியவந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Thoothukudi ADMK Party Member Kanja Sales Police Investigation