செப்டிக் டேங்க் விஷவாயு தாக்கி நால்வர் பலி.. தூத்துக்குடியில் சோகம்.!!
Thoothukudi 4 Septic tank cleaning workers died attack of Poison gas leakage
செக்காரக்குடி பகுதியில் கழிவுநீர் தொட்டி விஷவாயு தாக்கி நான்கு பேர் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செக்காரக்குடி பகுதியில், வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து கழிவுகளை அகற்றிய போது விஷவாயு தாக்கி நான்கு பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் நால்வரும் கழிவுநீர் தொட்டி கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த வேளையில், எதிர்பாராத சூழலில் இந்த சோகம் அரங்கேறியுள்ளது. மேலும், இந்த விஷயம் தொடர்பாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், நால்வரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Thoothukudi 4 Septic tank cleaning workers died attack of Poison gas leakage