அதிகாலை அலறல் சத்தம்.. மூதாட்டி என்றும் பாராமல் கொடூரர்கள் செய்த செயல்.! திருவண்ணாமலையில் பரபரப்பு.!
ThiruvNnamalai women murdered
திருவண்ணாமலையில் தேவகி என்ற 51 வயது பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் முன் அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். மற்றவர்கள் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் அதிகாலை 4 மணி அளவில் தேவகி அலறும் சத்தம் கேட்டுள்ளது.
வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த குடும்ப உறுப்பினர்கள் ஓடி வந்து பார்த்த பொழுது தேவகி மீது தீ பற்றி எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தீயை அணைத்து விட்டு தேவகியை பார்த்த பொழுது அவர் ஏற்கனவே உயிரிழந்து இருப்பது தெரியவந்தது.
தேவகி உறங்கி கொண்டிருந்த இடத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி இருப்பது தெரியவந்தது. பின்னர், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய ஆய்வில் சம்பவ இடத்தில் மண்ணெண்ணெய் கேன் எதுவும் இல்லை. ஆகவே யாரோ வேண்டுமென்றே மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி தடயம் இல்லாமல் கேனையும் எடுத்துச் சென்று இருப்பதால் இது கொலை என்று உறுதி செய்யப்பட்டது.
முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் தேவகி உறவினர்களுடன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்.
English Summary
ThiruvNnamalai women murdered