பப்ஜி விளையாடுவதில் தகராறு.. இஸ்மத்தை குத்திக்கொலை செய்த வாஜித்.. திருவாரூரில் பேரதிர்ச்சி.!
Thiruvarur Youngster Murder due to PUBG Playing Fight Issue
பப்ஜி முன்விரோதத்தில் இளைஞர் குத்திக்கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை நாச்சிகுளம் பகுதியை சார்ந்தவர் நாகூர் பிச்சை. இவரது மகன் இஸ்மத் (வயது 22). இவர் டிப்ளமோ படித்துள்ள நிலையில், மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகர் பகுதியருகே சாலையோரமாக சடலமாக கிடந்துள்ளார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மன்னார்குடி காவல் கண்காணிப்பாளர் இளஞ்செழியன் மற்றும் காவல் ஆய்வாளர் விசுவநாதன் ஆகியோர் நேரடி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், நாச்சிகுளம் பகுதியை சார்ந்த இஸ்மத்தின் நண்பர் வாஜித் (வயது 23) என்பவருக்கும், இஸ்மத்திற்கும் இடையே பப்ஜி விளையாடுவதில் முன்விரோதம் இருந்தது உறுத்தியது. மேலும், சம்பவத்தன்று மன்னார்குடிக்கு சென்று சமாதானம் பேசலாம் என அழைத்த வாஜித், இஸ்மத்தை அழைத்து சென்று இருக்கிறார்.
அங்கு, ஆர்.பி. சிவம் நகர் அருகேயுள்ள பகுதியில் இஸ்மத், வாஜித், வாஜித்தின் நண்பர்கள் தீன் ஹனீஸ், மர்ரூஜ், அக்பர் பாஷா ஆகியோரும் இருந்துள்ளனர். சம்பவ இடத்தில் இஸ்மத்துக்கும் - வாஜித்துக்கும் இடையே தகராறு ஏற்பட, வாக்குவாதம் முற்றியதில் வாஜித் மற்றும் அவனது நண்பர்கள் இஸ்மத்தை கொலை செய்து தப்பி சென்றுள்ளனர்.
இந்த குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இஸ்மத் கொலை செய்யப்பட்டதற்கு பப்ஜி முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா? என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Thiruvarur Youngster Murder due to PUBG Playing Fight Issue