டாஸ்மாக்கில் திருடி, நண்பர்களுக்கு டிரீட் வைத்த திருட்டு குட்டிஸ்.. விசாரணையில் மற்றொரு கேஸ்.! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடுவூர் கதாப்பு சதரு கிராமத்தில் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையில் கடந்த 23 ஆம் தேதியன்று பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், மதுபானங்களை திருடிச் சென்றுள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக கடையின் மேற்பார்வையாளர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அங்குள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த இரண்டு லட்சம் மதிப்பிலான 21 மடிக்கணினி திருடு போனது தெரியவந்தது. 

இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விஷயம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று காவல்துறையினரின் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகையில் இரண்டு சந்தேகத்துக்கிடமான வாலிபர்கள் சிக்கியுள்ளனர். 

இவர்களை கைது செய்து விசாரித்ததில், சாஜன் (வயது 22) மற்றும் கதவன் (வயது 20) என்பது தெரியவந்தது. இவர்கள் அளித்த தகவலின் பேரில், ஹரிஹரன் மற்றும் தினேஷ் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மதுபான கடையில் கொள்ளையில் ஈடுபட்டு நண்பர்களுக்கு மது விருந்து வைத்ததும், அரசு பள்ளியில் நுழைந்து மடிக்கணினியை திருடி விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur Vaduvur School Laptop Theft and Tasmac Theft Gang Arrest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->