திருவாரூர் : திருட்டு மணல் கொள்ளையில் போட்ட போட்டி! பலியான அப்பாவி வாலிபர்கள்.!
THIRUVARUR SAND ROBBERY 2 YOUNG MAN KILLED
திருவாரூர் : முத்துப்பேட்டை அருகே உள்ள செம்படவன்காடு பகுதியில் இயங்கிவந்த கறிகடையில், தஞ்சை அதிராம்பட்டினம் பயாஸ் அகமது (வயது 22), ஷகீல் அகமது (18) ஆகிய இருவர் பணிபுரிந்து வந்தனர்.
சம்பவம் நடந்த நேற்றிரவு கடையை மூடிவிட்டு பைக்கில் இருவரும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அந்நேரம், முத்துப்பேட்டை பாமணி ஆற்று பாலத்தில், எதிரே மணல் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த டிராக்டர்கள் மோதியதில், வாலிபர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து முத்துப்பேட்டை போலீசார் விபத்து ஏற்படுத்திய இரண்டு டிராக்டரையும் பறிமுதல் செய்து, கொய்யா தோப்பு கார்த்தி(38) என்பவரை கைது செய்தனர்.
தலைமறைவான மற்றொரு டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
English Summary
THIRUVARUR SAND ROBBERY 2 YOUNG MAN KILLED