உயிரை குடித்த பப்ஜி….! திருவாரூரில் பரபரப்பு….!
Thiruvarur PUBG Playing Youngsters Murder Another One
திருவாரூர் மாவட்டம், முத்துபேட்டை நாச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் நாகூர்பிச்சை. இவருக்கு இஸ்ரத் ஷேக் என்ற மகன் இருக்கிறார். இஸ்ரத் நேற்று முன் தினம் மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகர் பகுதியில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார் இஸ்ரத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், முதற்கட்ட விசாரணையில் பப்ஜி விளையாட்டில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இஸ்ரத் கொலை செய்யப்படுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், இஸ்ரத் மன்னார்குடியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி பாலிடெக்னிக் படித்து வந்துள்ளார்.
படிப்பு முடிந்து தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு நாச்சிகுளம் பகுதியை சேர்ந்த அவருடைய முகமது வாகித் என்பவருக்கும் இடையே பப்ஜி விளையாட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நியையில், இஸ்ரத் சமாதனம் பேச அழைத்துள்ளார்.
அதனால் மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகர் பகுதிக்கு இஸ்ரத், முகமது வாகித் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் தீன்ஹனீஸ் (23), மப்ரூக் முகமது (20), அக்பர்பாஷா (20) ஆகியோர் வந்துள்ளனர். அங்கு அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டதில் வாக்குவாதம் முற்றியது.
இதனால் வாகத், தீன்ஹனீஸ், மப்ரூக் முகமது, அக்பர்பாஷா, ஆகியோர் இஸ்ரதை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். என்று காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்று கொலையாளிகள் நால்வரையும் கைது செய்தது காவல்துறை.
பப்ஜி விளையாட்டில் ஏற்பட்ட முன்விரோதத்தால் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Thiruvarur PUBG Playing Youngsters Murder Another One