பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி.. ஆசை வார்த்தையில் அரங்கேறிய பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தை சொந்த ஊராக கொண்டவர் உஷா (வயது 35). இவரது கணவரின் பெயர் பரமசிவம். இவர் திருப்பூரில் இருந்து பணியாற்றி வந்த நிலையில், ஊரடங்கு காரணமாக அங்கேயே சிக்கியுள்ளார். இந்த சூழ்நிலையில், கணவரை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் உஷாவுக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து திருவாரூரில் இருந்து திருப்பூருக்கு உஷா சென்ற நிலையில், கரூர் பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் தவித்துள்ளார். இதனையடுத்து இரவு அங்கேயே தங்கிவிட்டு காலை திருப்பூருக்கு சென்றுவிடலாம் என்று முடிவு செய்துள்ளார். 

இந்த நேரத்தில், ராமாயி என்ற பெண்மணி தான் கரூரில் இருந்து மதுரை செல்வதாக கூறி அறிமுகமாகியுள்ளார். மேலும், மதுரையில் நல்ல வேலை இருப்பதாகவும், மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் என்றும், தங்க வீடு மற்றும் உணவு இலவசம் என்று கூறி ஆசை வார்த்தையை அள்ளிவிட்டுள்ளார். 

இதில் மயங்கிய உஷாவை மதுரைக்கு அழைத்து சென்ற நிலையில், உஷாவை வைத்து பாலியல் தொழில் நடத்த இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், இரவு நேரத்தில் பல நபர்களை வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளனர். 

இவர்களின் பிடியில் இருந்து அதிஷ்டவசமாக தப்பிய பெண்மணி, அங்குள்ள பொதுமக்களிடம் உதவி கேட்கவே, அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சமயத்தில், பெண் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். 

இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் பெண்ணை செஞ்சிலுவை சங்க அமைப்பினர் சொந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur police girl forced Prostitution police investigation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->