காதலித்தவனுக்கு திருமணம்... திருமண மண்டபத்தை கலவரப்படுத்திய பெண்மணி..! - Seithipunal
Seithipunal


தன்னை காதலித்தவருக்கு மாற்று பெண்ணுடன் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், திருமணத்தை காதலித்த பெண்மணி தடுத்து நிறுத்த முயற்சித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் நல்லிச்சேரி பகுதியை சார்ந்த பெண்மணி செல்வி. இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகையில், திருவாரூர் செம்மங்குடி பகுதியை சார்ந்த செந்தில் முருகன் என்ற கிரேன் ஆபரேட்டரை காதலித்து இருக்கிறார். 

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், செந்தில் முருகன் பணியின் காரணமாக வெளிநாடு சென்றுள்ளார். வெளிநாட்டில் இருந்து திரும்பியவருக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதற்காக பெண் பார்க்கப்பட்டு, இன்று திருமணமும் நடைபெற்று முடிந்துள்ளது. 

இந்நிலையில், இன்று காதலருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெறும் செய்தி அறிந்த பெண்மணி, திருமண மண்டபத்திற்கு சென்று கத்தி கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்தார். அவரை அங்கிருந்த நபர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் அங்கிருந்து அழைத்து செல்ல முற்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur Kudavasal Girl Creating Problem at Love Boy Marriage Function


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->