சிறுமிக்கு வீடுபுகுந்து தாலிகட்டிய, திருமணம் முடிந்த காமுக கொடூரன்.. திருவாரூரில் பரபரப்பு.!!
Thiruvarur girl sexual abuse and child marriage
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள தலைக்காடு கிராமத்தை சார்ந்தவர் பழனிமுருகன் (வயது 28). இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி இருக்கும் நிலையில், மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறான்.
இந்நிலையில், இதே பகுதியை சார்ந்த 17 வயது சிறுமியின் இல்லத்திற்கு சென்ற காமுக கொடூரன் பழனிமுருகன், சிறுமிக்கு தாலி கட்டியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, காமுகன் பழனிமுருகனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைப்போன்று அங்குள்ள முத்துப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்மணி குளத்திற்கு குளிக்க சென்ற நிலையில், அதே பகுதியை சார்ந்த காமுகன் மணிகண்டன் என்பவன், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இந்த விஷயம் தொடர்பாக பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, காவல் துறையினர் காமுகன் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Thiruvarur girl sexual abuse and child marriage