மகளை குடும்பம் நடத்த அனுப்பாத மாமனார் கொலை.. குடிகார மருமகன் வெறிச்செயல்.!!
Thiruvarur Father In Law Murder Police Investigation 19 August 2021
மாமனாரை கொலை செய்த மருமகன் காவல் துறையினரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாணிக்கமங்கலம் பகுதியை சார்ந்தவர் நாகராஜ். இவரது மகள் மணிமேகலை. மணிமேகலைக்கும் - வேடம்பூர் பகுதியை சார்ந்த சிவானந்தம் எனபவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
கடந்த 2019 ஆம் வருடம் தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், திருமணம் முடிந்த சில மாதங்களுக்கு பின்னர் சிவானந்தம் மதுபானம் அருந்திவிட்டு வந்து மணிமேகலையிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.
இதனால் ஒரு சமயத்திற்கு மேல் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற மணிமேகலை, தனது தந்தையின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்பின்னர், சிவானந்தம் பலமுறை மணிமேகலை வீட்டிற்கு சென்று குடும்பம் நடத்த அளித்தும் பலனில்லை.
இந்நிலையில், சம்பவத்தன்று மாமனாரின் வீட்டிற்கு வந்த சிவானந்தம், மதுபோதையில் மனைவியை தன்னுடன் வாழ அனுப்பி வைக்குமாறு மாமனார் நகராஜிடம் கூறியுள்ளார். இதன்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்படவே, ஆத்திரத்தில் சிவானந்தம் நாகராஜனை கீழே தள்ளிவிட்டதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார்.
பலத்த காயமடைந்த நாகராஜை மீட்ட குடும்பத்தினர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க, அவர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு சிவானந்தத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Thiruvarur Father In Law Murder Police Investigation 19 August 2021