நிலத்தகராறில் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை.. திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு இரட்டை ஆயுள்.! - Seithipunal
Seithipunal


நிலத்தகராறில் திமுக பிரமுகர் பிரமுகர் கொலையாளியாக மாறிய நிலையில், அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியை சார்ந்தவர் தமிழ்செல்வன். இவருக்கும், மன்னார்குடியை வில்லிக்கோட்டையை சார்ந்த ஆசைத்தம்பி என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்த விசயத்திற்கு மத்தியஸ்தம் செய்ய முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பொய்யாமொழி வந்துள்ளார். 

இந்த சமரச பேச்சுவார்த்தையின் போது, தமிழ்செல்வன் பொய்யாமொழியை அவதூறாக பேசி அவமானம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொய்யாமொழி தமிழ்ச்செல்வனை தீர்த்துக்கட்டும் பொருட்டு அவரின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ளார். 

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொய்யாமொழி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கு விசாரணை பூந்தமல்லி கரையான்சாவடி பகுதியில் இருக்கும் வெடிகுண்டு வழக்குகளை விசாரணை செய்யும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. 

இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலையில், திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொய்யாமொழியின் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாக, அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தும், ரூ.1 இலட்சம் அபராதம் விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur DMK Village President Prisoned 40 Years about 2005 Murder Case Court Judgement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->