கனமழை காரணமாக குறிப்பிட்ட மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
Thiruvarur and nannilam taluk school holiday due to heavy rain
கன மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 2 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனையடுத்து கனமழை காரணமாக திருவாரூர், நன்னிலம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
English Summary
Thiruvarur and nannilam taluk school holiday due to heavy rain