திருவாரூர்: விவசாய நிலம் வழியாக சென்ற ஓ.என்.ஜி.சி எண்ணெய் குழாயில் உடைப்பு.. விவசாயி வேதனை.!
Thiruvarur Agriculture Land Spoiled by ONGC Oil Pipe Leakage
விவசாய நிலத்தில் எண்ணெய் குழாய் உடைந்து, விவசாய நிலத்தினை பாழடைய வைத்துள்ள சோகம் அரங்கேறியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கமலாபுரம் அருகேயுள்ள கிராமம் மேல இருக்காட்டூர். இந்த கிராமத்தை சார்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமாக உள்ள விவசாய நிலத்தின் வழியாக ஓ.என்.ஜி.சி எண்ணெய் குழாய் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இவருக்கு சொந்தமாக 1 ஏக்கர் நிலம் உள்ள நிலையில், இந்த விவசாய நிலத்தின் வழியாக சென்ற ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய் குழாய் உடைந்துள்ளது. இதனால் மேலே விவசாய செய்ய தாயாராக இருந்த நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் படலங்கள் அனைத்தும் விவசாய நிலத்தின் மீது படர்ந்துள்ள நிலையில், இந்த விஷயம் தொடர்பாக ஓ.என்.ஜி.சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், முன்னதாக கடந்த வருடத்தின் போதும் இதனைப்போன்றே எண்ணெய் குழாய் உடைந்து விவசாய நிலத்தினை பாழாக்கியதாக விவசாயி கணேசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Thiruvarur Agriculture Land Spoiled by ONGC Oil Pipe Leakage