நடிகர் சந்தானத்தின் உறவினர் பெண் கொலை வழக்கில், குற்றவாளிகள் கைது.. அமெரிக்கா மாப்பிளைக்கு வலைவீச்சு.!! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்திலுள்ள கிடாரங்கொண்டான் கிராமத்தைச் சார்ந்தவர் சிதம்பரம். இவரது மகள் ஜெயபாரதி. இவர் நடிகர் சந்தானத்தின் தூரத்து உறவினர் ஆவார். ஜெயபாரதிக்கும் - கும்பகோணத்தை சேர்ந்த அமெரிக்க மாப்பிள்ளையான விஷ்ணு பிரகாஷ் என்பவருக்கும் கடந்த 2013 ஆம் வருடம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா மாகாணத்தில் வசித்துவந்த தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது. 

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக மனைவி மற்றும் குழந்தைகளை விஷ்ணு பிரகாஷ் அமெரிக்காவிலிருந்து திருவாரூரில் உள்ள தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். தாய் வீட்டில் வசித்து வந்த ஜெயபாரதி அஞ்சல் துறையில் தற்காலிக கிளர்க்காக பணியாற்றி வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கார் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். ஜெயபாரதியின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் முதலில் விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். 

ஆனால், வழக்கில் முன்னேற்றம் இல்லாத நிலையில், நடிகர் சந்தானத்திற்கு விஷயத்தை தெரியப்படுத்தி, அவர் அரசியல்கட்சியை சார்ந்த நண்பர் மூலமாக காவல்துறை உயரதிகாரியிடம் பேசி வழக்குப்பதிவு செய்ய வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, 4 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரணையில், ஜெயபாரதி தனது கணவர் விஷ்ணு பிரசாத் மற்றும் அவர் பணியாற்றி வரும் அமெரிக்க நிறுவனத்திற்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பி வைத்துள்ளார். 

இதனால் விஷ்ணுவின் வேலைக்கு ஆபத்து ஏற்படவே, அவர் ஊரில் இருக்கும் தனது சொந்தக்காரர்கள் மூலமாக மனைவியை கொலை செய்ய கூலிப்படை தயார் செய்து ஏவியதும் அம்பலமானது. இந்நிலையில், திருவாரூர் காவல் துறையினர் இந்த வழக்கில் ஏற்கனவே வாகனத்தின் ஓட்டுநர் பிரசன்னா மற்றும் உரிமையாளர் செந்தில்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தலைமறைவாக இருந்த குற்றவாளிகளான ராஜா, ஜெகன் ஆகியோரும் கைது செய்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டதில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். விஷ்ணு பிரகாஷ் அமெரிக்காவில் உள்ள நிலையில், அவனை தமிழகம் அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விஷ்ணு பிரகாஷின் மைத்துனர் செந்தில்குமார் கொரோனாவால் மருத்துவமனையில் உள்ள நிலையில், சிகிச்சைக்கு பின்னர் அவரும் கைது செய்யப்படுவார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur Actor Santhanam Relation Woman Murder Case Culprits Arrested 24 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->