திருவண்ணாமலை :தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 12ம் வகுப்பு மாணவர் பலி.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்தவர் கணேஷ் என்பவரின் மகன் திருமுருகன். இவர் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி திருமுருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆரணி பகுதியில் உள்ள காந்திநகர் சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தந்தூரி சிக்கன் மற்றும் சிக்கன் ப்ரைட் ரைஸ் சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு சென்ற திரு முருகனுக்கு இரவு முழுவதும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

உடனே அவரை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சாப்பிட்ட உணவு விஷமாக மாறி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரை மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் திருமுருகன் சிகிச்சை பலனின்றி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஏற்கனவே ஆரணியில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvannamalai12th class student killed after eating tandoori chicken


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->