திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை வடக்கு மாவட்ட  அதிமுக சார்பில்  உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் என்ன நடந்தது தெரியுமா?..

திருவண்ணாமலை  வடக்கு மாவட்ட,  அஇஅதிமுக கட்சி சார்பில்  உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், ஆரணி தன்பால் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு  மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி மோகன் தலைமைத் தாங்கினார். முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் தற்போதைய ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான  சேவூர் இராமச்சந்திரன், கலசபாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இக்கூட்டத்தில் நடக்க  இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற எவ்வாறு கட்சிப் பணியாற்ற வேண்டும், புதிதாக கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம் அவர்களும் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை  வழங்கினார். 

இந்நிகழ்வில் வடக்கு மாவட்டத்தைச் சார்ந்த பல்வேறு கட்சி நிர்வாகிகளும் கிளைக் கழக செயலாளர்களும் கலந்துகொண்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvannamalai North District AIADMK Meeting


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->