காதல் திருமணம் செய்த புதுமண ஜோடிகளின் விபரீத முடிவு.. திருவண்ணாமலையில் சோகம்.!!
Thiruvannamalai love couple suicide attempt
தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு தானிப்பாடி அருகேயுள்ள மோத்தக்கல் கிராம பகுதியை சார்ந்தவர் வேடியப்பன். இவரது மகனின் பெயர் ஜெயக்குமார் (வயது 24). இவர் டிப்ளமோ படித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை கல்லூர் கிராமத்திற்கு அவ்வப்போது சென்று வந்த நிலையில், அதே கிராமத்தை சார்ந்த விஜயா (வயது 23) என்ற பெண்ணுடன் நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் பின்னாளில் காதலாக மாறியுள்ளது.
விஜயா ஆசிரியர் பயிற்சி பெற்ற நிலையில், இவர்களின் காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோர்களுக்கு தெரியவந்துள்ளது. விஜயாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ஜெயக்குமார் பெற்றோருக்கு தெரியாமல் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னதாக திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இதன்பின்னர் அங்குள்ள கோட்டைகல் கிராமத்தில் இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில், விஜயாவின் வீட்டில் இருந்து தொடர்ந்து எதிர்ப்பு வந்துள்ளது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான இருவரும், நேற்று மதியம் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Thiruvannamalai love couple suicide attempt