திருவண்ணாமலை., சிறுமி பலாத்கார வழக்கில்., தொடர்ந்து இரண்டு மணிநேரம் பலவந்தபடுத்தியதால் இரத்த போக்கில் துடிதுடித்து உயிரிழந்தாள்.!! வெளியான தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர்.!!    - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு அருகேயுள்ள தென்முடியனூரை சார்ந்த 5 ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் அங்குள்ள கரும்பு தோட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பிணமாக கிடந்தார். 

இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு தகவல் வந்ததும் விரைந்த காவல் துறையினர்., சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு., பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

அந்த விசாரணையின் முடிவில்., இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகித்த அதே பகுதியை சார்ந்த விவசாயி கணேசன் (வயது 60) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் அவர் கூறிய பதிலை கேட்டு அதிர்ச்சியுற்றனர். 

அந்த விசாரணையில்., மது அருந்திவிட்டு அதிக மது போதையில் இருந்த கணேசன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியை கவனித்துள்ளார். அவரிடம் சாந்தமாக பேசி அவரை கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார். 

கருப்பு தோட்டத்தில் இருந்த பகுதியில் மனைவியை பலாத்காரம் செய்துள்ளார்., மேலும்., மாணவியை தொடர்ந்து இரண்டு மணிநேரம் மிரட்டி பலாத்காரம் செய்தததில் சிறுமியின் உடலில் இருந்து அதிகளவு இரத்தம் வெளியேறியுள்ளது. 

இதனால் சிறுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை கண்ட கணேசன் காவல் துறையினரிடம் மாட்டிக்கொள்வோம் என்று சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுள்ளார்.  

இந்த விஷயம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். மேலும்., காவல் துறையினரின் விசாரணையில்., சிறுமியின் கழுத்தில் பற்கள் பதிந்த காயங்களும்., உடலில் சில காயங்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruvannamalai girl student rape case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->