திருமணத்திற்கு பெண் பார்க்கவில்லை என்று, பெற்ற தாய், தந்தையை கொடூர கொலை செய்த மகன்.!!
Thiruvannamalai father and mother murder by son police investigate
தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு சாத்தனூர் தாங்கள் அருந்ததியர் காலனி பகுதியை சார்ந்தவர் கோவிந்தசாமி (வயது 60). இவர் விவசாயியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் மாங்கனி (வயது 55). இவர்களுக்கு ராம்குமார் (வயது 30) என்ற மகனும், 3 மகள்களும் இருக்கின்றனர். இவர்களின் மூன்று மகள்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது.
இந்த நிலையில், ராம்குமார் தனக்கும் திருமணம் செய்து வைக்க கூறி பெற்றோரோகளிடம் முறையிடவே, பெற்றோர்கள் தள்ளிப்போட்டு வந்துள்ளனர். இருந்தாலும், ராம்குமார் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோர்களை வற்புறுத்தி வந்துள்ளார். பெற்றோர்களும் அவ்வப்போது சமாதானம் செய்து வைத்து இருக்கவே, நேற்று வழக்கம் போல தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பெற்றோர்கள் மீண்டும் சாதனம் செய்யவே, பெற்றோர்கள் தனக்கு திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறி பிரச்சனை செய்துள்ளார். இந்த நிலையில், இரவு தூங்கிக்கொண்டு இருந்த தாய் மற்றும் தந்தையின் மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இருவரும் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததும், சைக்கிள் மூலமாக திருவண்ணாமலைக்கு தப்பி சென்றுள்ளார்.
வீட்டில் கேட்கும் அலறல் சத்தத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பார்க்கையில் விபரீதம் புரிந்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Thiruvannamalai father and mother murder by son police investigate